இஸ்ரேல், லெபனானுக்கு எதிராக தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் லெபனானுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளது.
லெபனானுக்கு துணை நிற்கிறோம் என அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹியான் அறிவித்துள்ளார். லெபனானுக்கு உதவி அளிக்க 2 வார காலம் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில், ஐக்கிய அரபு அமீரக மக்கள் லெபனானுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகின்றனர். நெருக்கடியான சூழல் தொடங்கியதற்குப் பிறகு, ரூ.840 கோடி அளவிலான அவசர உதவியை வழங்கியுள்ளனர். மேலும், சிரியாவில் உள்ள லெபனான் அகதிகளுக்காக ரூ.252 கோடியை வழங்கியுள்ளது. இதுவரை 10 விமானங்களில் 450 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.