ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இந்த நிலநடுக்கங்களின் தாக்கத்தால் மியாசாகி மாகாணத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, கியூஷுவின் தெற்கு கடற்கரையில் 50 சென்டிமீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் உருவாகியுள்ளன.
நிச்சினன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக குலுங்கியதால், மியாசாகி பகுதியில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கடுமையான சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.