கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிரெடிட் சுயிஸ் வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கிரெடிட் சுயிஸ் வங்கியை யுபிஎஸ் நிதி நிறுவனம் முற்றிலுமாக கைப்பற்றியது. இதனால், திவால் நிலை தவிர்க்கப்பட்டது. சுவிட்சர்லாந்து அரசாங்கம் தலைமையில் இந்த கையகப்படுத்துதல் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது, பாதிக்கும் மேலான கிரெடிட் சுயிஸ் வங்கி ஊழியர்களை யுபிஎஸ் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கிரெடிட் சுயிஸ் வங்கி யுபிஎஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது, கிட்டதட்ட 45000 ஊழியர்கள் இருந்தனர். தற்போது, அவர்களில் 35000 பேரை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய பெரிய அளவிலான பணி நீக்கம் நடைபெறும் என்று நிபுணர்கள் முன்கூட்டியே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், இந்த இரு நிதி நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்தில் 120000 பேர் பணி செய்கின்றனர். அவர்களில் 37000 பேர் ஸ்விட்சர்லாந்தில் மட்டும் பணி செய்கின்றனர்.