புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் வழியாக இணைப்பதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய அரசு வங்கி தடை விதித்தது. மேலும், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குவதற்கும் தடை விதித்தது. இந்த செய்திகளின் விளைவாக, கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 13% வரை வீழ்ச்சி அடைந்தன.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான உதய் கோட்டக் ஆவார். அவரிடம் 26% கோட்டக் மஹிந்திரா பங்குகள் உள்ளன. இந்த நிலையில், கோட்டக் மஹிந்திரா பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் விளைவாக, 1.3 பில்லியன் டாலர்கள் இழப்பை உதய் கோட்டக் சந்தித்துள்ளார். ப்ளூம்பர்க் பட்டியலின்படி, அவரது சொத்து மதிப்பு 14.4 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆசியாவின் பணக்கார வங்கியாளராக ப்ளூம்பர்க் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் நீடித்து வருகிறார்.