விக்ரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின் மூன்று நாட்கள் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவின் மரணத்தை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி வருகிற பத்தாம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. அதிமுக மற்றும் தேமுதிக தேர்தலை புறக்கணிப்பதற்காக தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அங்கு தற்போது பிரச்சாரம் சூடுபடுத்தி உள்ளது. அதன்படி திமுகவிற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் 6,7, 8 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது