பிரிட்டன் -அரசாங்க கைபேசிகளில் டிக் டாக் செயலிக்கு தடை

March 17, 2023

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கு பிரிட்டனிடம் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், இனிமேல் அரசாங்க கைபேசிகளில் டிக் டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த நலனுக்காக டிக் டாக் சீன செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சரவை செயலாளர் ஆலிவர் டவுடன், “அரசாங்க கைபேசிகளில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதால், அரசாங்க தரவுகள் வெளிநாட்டு தளங்களுக்கு கசிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் இது […]

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கு பிரிட்டனிடம் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், இனிமேல் அரசாங்க கைபேசிகளில் டிக் டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த நலனுக்காக டிக் டாக் சீன செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அமைச்சரவை செயலாளர் ஆலிவர் டவுடன், “அரசாங்க கைபேசிகளில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதால், அரசாங்க தரவுகள் வெளிநாட்டு தளங்களுக்கு கசிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயலி தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதற்கு டிக் டாக் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu