இங்கிலாந்தில் ஜூன் 4ம் தேதி பொது தேர்தல் அறிவிப்பு

May 23, 2024

இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூன் 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் வரும் 2025 ஜனவரி மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, நிகழாண்டு பிற்பகுதியில் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால், வெகு விரைவாக, ஜூன் 4ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இடம் அனுமதி கேட்கப்பட்டு, அதற்கான […]

இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூன் 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் வரும் 2025 ஜனவரி மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, நிகழாண்டு பிற்பகுதியில் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால், வெகு விரைவாக, ஜூன் 4ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இடம் அனுமதி கேட்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். ரிஷி சுனக் பிரதமராக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அவருக்கு எதிராக தொழிலாளர் கட்சியினரும் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். தேர்தல் தேதிகளை செய்தியாளர்களிடம் அறிவித்த ரிஷி சுனக், “இங்கிலாந்து நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தருணம் இது” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu