இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக நடத்திய போரில் மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளான ஜெனரல் ஷவேந்திர சில்வா, வசந்த கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா மற்றும் வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது. இந்த நான்கு பேருக்கும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்கு உள்ள சொத்துகளை முடக்கவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த தடைகளை மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு விதித்ததாக தெரிவித்தது.