பிரிட்டனின் சர்வதேச சுற்றுச்சூழல் அமைச்சர் ஜாக் கோல்டுஸ்மித் இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, சுற்றுச்சூழல் மீது எந்தவித அக்கறையும் இல்லை என விமர்சித்துள்ளார். சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான எந்தவித நடவடிக்கைகள் மீதும் அவர் நாட்டம் காட்டவில்லை என கூறியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உலக அரங்கில் பிரிட்டன் வெளிப்படையாக வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச அரங்கில் பிரிட்டன் தனது இடத்தை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், பூஜ்ஜிய கார்பன் இலக்கை அடைவதை நோக்கி உலக நாடுகள் இயங்கி வருகின்றன. ஆனால், பிரிட்டன் அதற்கான இலக்கை அடைவதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இதன் மூலம் சர்ச்சைகள் எழுந்துள்ளன.