மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் வகையில், ரஷியா ஐ.சி.பி.எம். (ICBM) ரக ஏவுகணைகளை பயன்படுத்தி, உக்ரைனின் அருகிலுள்ள நகரை தாக்கியது. இதை தொடர்ந்து, ரஷியாவின் ஜனாதிபதி புதின், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறியதாவது: "எங்கள் புதிய ஏவுகணையை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் நிறுத்த முடியாது. அது ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிவேகமாக செல்லும். உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும், எங்கள் நாட்டுக்கு எதிரான ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். மேற்கத்திய நாடுகள் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.