ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து ரஷ்ய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் இன்று அதிகாலை மாஸ்கோவில் 8 ஏவுகணைகளை ஏவி தீவிரவாத தாக்குதல் நடத்தியது. எனினும் நாங்க அந்தத் தாக்குதலை இடைமறித்தோம். பல கட்டிடங்கள், வாகனங்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தது. ஆனால் இதுகுறித்து உக்ரைன் கூறுகையில், நாங்கள் வான்வழி தாக்குதலை நடத்தவில்லை. எனினும், இம்மாதிரியான தாக்குதல் மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, 30 வான்வழித் தாக்குதல் மாஸ்கோவில் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.