உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தாலும், அவை வெற்றியடையவில்லை. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றன. இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். போர் தொடர்ந்து நிலவுவதால், உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.