உக்ரைன் ரஷ்யா போரில், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்தது. இந்தப் பகுதிகளில், அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய ஆதரவு கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பகுதிகளான லுஹான்ஸ்க், கேர்சான், சபோரிஷியா, டொனட்ஸ்க் ஆகிய 4 பிராந்தியங்களில் கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய ரஷ்யா கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கிழக்கு உக்ரைன் பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகமாக இருந்து வந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்து உள்ளதால், ரஷ்ய ஆதரவு கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், இந்த தேர்தலில், ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினாலும், போர் நடைபெறும் வேளையில் தேர்தல் நடத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.