கிரிமியாவுடன் இணைத்து கட்டப்பட்ட மாஸ்கோவின் ஒரு முக்கிய பாலத்தை வாகன வெடிகுண்டு சேதப்படுத்தியது. இச்சம்பவத்திற்கு உக்ரேனிய அதிகாரிகள் பொறுப்பேற்கவில்லை என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த கெர்ச் பாலம் 2018 ஆம் புடினால் திறந்து வைக்கப்பட்டது. இது உக்ரைனில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு இராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாகும். இந்நிலையில் ஒரு வாகனம் வெடித்து தீ பற்றியதில், பாலம் வெடித்து, ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஏழு எண்ணெய் டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் இரயில் கட்டமைப்பின் இரண்டு கார் பாதைகள் சரிந்தன. உடனே மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனர். அச்சமயம் கிரிமியாவில் இ௫ந்த ஒரு ரஷ்ய அதிகாரி இதற்கு பொறுப்பு௯றும் வகையில் உக்ரேனியர்களை சுட்டிக்காட்டினார். உக்ரேனிய தபால் அலுவலகம் கிரிமியன் பாலத்தை துல்லியமாக காட்டும் முத்திரைகளை அச்சிட தயாராகி வருவதாக அறிவித்தது. அதன்படி பாஸ் இகோர் ஸ்மெலியான்ஸ்கி புதிய முத்திரைகளுக்கான வடிவமைப்பை Facebook இல் வெளியிட்டார் . அது வடிவைப்பு பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பை சித்தரித்தது. ஆனால் நடந்த குண்டுவெடிப்புக்கு எந்த உக்ரைனிய அதிகாரியும் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த பாலம் வெடிப்பு நிகழ்வை மோஸ்க்வா கப்பலை மூழ்கடித்த ரஷ்ய தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளது. மேலும் இதனை தபால் அலுவலகம் ஏற்கனவே சிறப்பு முத்திரைகளை அச்சிட்டு கொண்டாடியுள்ளது கவனிக்கத்தக்கது.