ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் மசோதா உக்ரைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் சப்ளை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் விதித்துள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த மசோதா அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது என அவர் கூறினார். மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.