ரஷிய பாதுகாப்புத்துறை அறிக்கையின்படி, ஒரேநாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தார், ஆனால் உக்ரைன் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில், உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் குர்ஷ்க் மாகாணத்தில் நுழைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்கான போரில் ரஷிய படையினர் போராடி வருகின்றனர். குர்ஷ்கில் நடந்த தாக்குதலில், ரஷிய பாதுகாப்புத்துறை அறிக்கையின்படி, ஒரேநாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உக்ரைன் ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.