போரை உ௫வாக்கியதற்காக புடினை விசாரணைக்கு உட்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது

August 25, 2022

ரஷ்யாவானது ஆறு மாத படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் போரைத் தொடங்கும், என உக்ரேனிய அதிகாரிகள் ௯றுகின்றனர். அதனை எதிர்கொள்வதற்காக பல திட்டங்களை வகுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக ரஷ்யாவின் "ஆக்கிரமிப்பு போர்" பற்றி விசாரிக்க ஒரு சிறப்பு சர்வதேச நீதிமன்றம் ஜனாதிபதியின் துணைத் தலைவர் ஸ்மிர்நவ் ஆல் செயல்படுத்தப்படுகிறது. இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதற்காக உக்ரேனிய வழக்கறிஞர்கள் ,ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரிகள், […]

ரஷ்யாவானது ஆறு மாத படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் போரைத் தொடங்கும், என உக்ரேனிய அதிகாரிகள் ௯றுகின்றனர்.

அதனை எதிர்கொள்வதற்காக பல திட்டங்களை வகுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக ரஷ்யாவின் "ஆக்கிரமிப்பு போர்" பற்றி விசாரிக்க ஒரு சிறப்பு சர்வதேச நீதிமன்றம் ஜனாதிபதியின் துணைத் தலைவர் ஸ்மிர்நவ் ஆல் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதற்காக உக்ரேனிய வழக்கறிஞர்கள் ,ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் வர்ணனையாளர்கள் உட்பட 600 நபர்களை அடையாளம் காட்டியுள்ளனர் . இவ்வழக்கை தொடர்வதற்கான தீர்ப்பாய ஆவணத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பல நாடுகள் கையொப்பமிடத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு கையொப்பமிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட குற்றவாளிகள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று அவர் கூறினார். மேலும் சில நாடுகள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை ஒப்புக் கொண்டாலும், சில நாடுகள் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu