உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்த ரஷியா தயார் என்று ரஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.
2022 பிப்ரவரியில் ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து, பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கியதால், உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்த தொடங்கியது. இதனால் ரஷியா சில பகுதிகளில் பின்வாங்கியது. மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர 30 நாட்கள் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரஷிய அதிபர் புதின், போரை முடிக்க அமெரிக்கா முழுமையாக செயல்பட வேண்டும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்கக் கூடாது, ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இதற்கான ஒப்புதல் கிடைத்தால், 30 நாட்களுக்கு உக்ரைன் மீது தாக்குதலை நிறுத்த ரஷியா தயார் என்று தெரிவித்துள்ளார்.