உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.
உக்ரைன் ரஷ்ய படையெடுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள ஐரோப்பிய யூனியனுடன் சேர்வதற்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவு அடைய ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாகலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டேனிஸ் கூறுகையில், இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாடு சேர்வது ஒரு புதிய அத்தியாயமாகும் என்று கூறியுள்ளார். பெல்ஜியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹட்ஜா கூறுகையில், இது எங்கள் உறவில் ஒரு மயில் கல் என்று கூறியுள்ளார். உக்ரைனை போல் மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. முன்பே துருக்கியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில்தங்குதடையின்றி சரக்கு போக்குவரத்து நடைபெறும். நீதித்துறை உரிமை வரிவிதிப்பு, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.