ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொது இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக உக்ரைன் அமைச்சர் டெமிட்ரோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவால் இயலும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். ரஷ்ய படையெடுப்புக்கு பின் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் முதல்முறையாக சீனா சென்றுள்ளார். அங்கு அவர் சீன வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொது இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக உக்ரைன் அமைச்சர் டெமிட்ரோ தெரிவித்துள்ளார்.
நியாயமான மற்றும் நிலையான அமைதியை நோக்கி செல்வது எங்களுக்கு முக்கியம். சீனா இதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோயிங், ஒருமித்த கருத்தோடு இணைந்து அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச சமுதாயத்திற்கு சீனா உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.