ரஷ்யாவின் எல்லை மாகாணமான குர்ஸ்க்குள் உக்ரைன் படை நுழைந்து அங்கு கடந்த 4 நாட்களாக கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், குர்ஸ்க் வழியாக உக்ரைன் படையினர் ரஷ்யா மீது படையெடுத்துள்ளனர். இதனை ரஷ்ய படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். எனினும் அந்த பகுதியில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு போரிட்டு வரும் ரஷ்யப்படைக்கு பலம் சேர்க்க கூடுதல் படைப்பிரிவுகள் மற்றும் ஆயுத தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 280 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1000 உடன் வீரர்கள் குர்ஸ்க் மாகாணத்தில் நுழைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்கு ஏராளமான ரஷ்ய வீரர்கள் குவிந்திருந்த போதிலும் உக்ரைனின் முன்னேற்றத்தை தடுக்க ரஷ்யாவால் இதுவரை முடியவில்லை. எல்லை தாண்டி சுமார் 10 கிலோ மீட்டர் வரை முன்னேறியுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்தியுள்ள மிகப்பெரிய எல்லை தாண்டிய தாக்குதல் இது என்று கூறப்பட்டுள்ளது.