உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் சென்ற அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், போலந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷியாவைக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முயலவில்லை. புதின் கூறியதுபோல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷிய குடிமக்களை எதிரிகளாக பார்க்கவில்லை. உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது. குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து, ரஷிய டாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன, உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது என தெரிவித்தார்.