உலகளாவிய உணவு நெருக்கடிக்குப் பிறகு உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான தானியங்கள் வளரும் நாடுகளுக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்கின்றன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.
உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான உக்ரைன், ரஷ்யப்படையெடுப்பு தொடங்கிய பின்னர், கிட்டத்தட்ட அனைத்து விநியோகங்களையும் நிறுத்தியது . பின்னர் ஜூலை மாதம் கியேவ், மாஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியது. இ௫ப்பினும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே தானியங்களை ஏற்றுமதி செய்கிறது. இது குறித்து ௯றிய புடின் சமீப காலத்தில் ஐரோப்பிய நாடுகள் சுயநலமாக செயல்படுகின்றன. ஆகவே
இத்தகைய அணுகுமுறை, உலகில் உணவுப் பிரச்சினைகளை அதிகரிக்கும் மற்றும் நாடுகளுக்கிடையிலான நட்பை மறைத்து மனிதாபிமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றார்.














