ஏப்ரல் 29, மேற்குவங்காளம் பானர்ஜி கூறுகையில், “ஒட்டுமொத்தமாக 422 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர். அவ்வாறு தி௫ம்பியவர்களில் , 409 பேர் MBBS மாணவர்கள், 3 பேர் பல் மருத்துவப் படிப்பில் உள்ளனர், ஒருவர் கால்நடை மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார் மற்றும் 6 பேர் பொறியியல் மாணவர்கள்,மேலும் 3 பேர் கூலித் தொழிலாளிகள். இதுகுறித்து மம்தா நிருபர்களிடம் கூறுகையில், “ஆறு பொறியியல் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களில் இருவர் படிப்பில் சேர்ந்துள்ளனர், மற்றவர்கள் சேரும் நிலையில் உள்ளனர்,” அதேபோல் மருத்துவ மாணவர்கள் மாநிலத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 கூலித் தொழிலாளர்களில், இரண்டு பேர் ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர், மற்றொருவர் வேலை கிடைத்து துபாய்க்குச் சென்றுவிட்டார் என்று முதல்வர் கூறினார் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னர் மார்ச் 16 அன்று, உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியக் கல்லூரிகளில் தங்க வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.