ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் நேற்று காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 25.5% உயர்ந்து 22.58 பில்லியன் ரூபாயாக உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் பதிவாகும் அதிகபட்ச காலாண்டு லாபம் ஆகும்.
இந்திய அளவில் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளராக இருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை அளவு 11% ஆக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.4% உயர்ந்து 204.19 பில்லியன் ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் நிதி ஆண்டுக்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச வருவாய் இதுவாகும். இந்த செய்திகள் வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 2% அளவுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.