ஐநாவின் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் கிரேக் முகிபர் ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் போர் கடந்த 24 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போர் நாளுக்கு நாள் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி கொண்டுள்ளது. அதனால் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரில் இதுவரை 8,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் இயக்குனர் கிரேக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார். அவர் இந்த கடிதத்தில் காசா மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் ஐநா மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.