ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை - வடகொரியா காட்டம்

November 22, 2022

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை என வடகொரியா கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகள் ஆகியவற்றை மீறி  வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், 'ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக […]

ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்காவின் கைப்பாவை என வடகொரியா கூறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகள் ஆகியவற்றை மீறி  வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், 'ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வடகொரிய வெளியுறவு மந்திரி சோ சோன் ஹுய், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 'ஐ.நா. சாசனத்தின் நோக்கம், கோட்பாடுகள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை, சமத்துவம் ஆகியவற்றை பேணுவதை மறந்து, மிகவும் வெறுக்கத்தக்க அணுகுமுறையை ஐ.நா பொதுச்செயலாளர் எடுத்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வடகொரியாவின் ஏவுகணை சோதனையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் செயல்பாடுகளை ஆண்டனியோ குட்டரெஸ் கவனிக்காதது, அவர் அமெரிக்காவின் கைப்பாவை என்பதை தெளிவாக நிரூபிக்கிறது'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu