வளர்ந்து வரும் நகரமயமாதலால் வெப்பம் அதிக அளவில் உச்சம் அடைந்து ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் கடுமையான வெப்ப அலை காரணமாக மக்கள் பலரும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். தெற்கு ஐரோப்பியாவில் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இந்த வெப்ப அலையின் காரணமாக இத்தாலி அரசு 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரம் அடையும் .கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ள உலக மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பகலின் அதிகபட்ச வெப்பநிலையை விட இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இதே நிலை நீடித்தால் மனிதர்கள் வெப்பத்திலிருந்து மீள முடியாது மற்றும் மாரடைப்பு போன்ற இறப்புகளுக்கு வழி வகுக்கும். வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும் எனவும், அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் எனவும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் கூறியுள்ளார். மேலும் ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெப்ப அலைக்கு 2003 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் 70 ஆயிரம் பேரும் கடந்த ஆண்டு 62,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.