ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தபடுகிறது.
ராணுவ பிரிகேடியர் மற்றும் அதற்குமேல் உள்ள அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை ஆகஸ்ட் 1 முதல் அறிமுகப்படுத்த ராணுவ வட்டாரங்கள் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டின் போது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்திய விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மூத்த அதிகாரிகளின் தலைக்கவசம், தோள்பட்டை ரேங்க் பேட்ஜ்கள், கோர்ஜெட் பேட்ஜ்கள், பெல்ட் மற்றும் ஷுக்கள் ஆகியவை தரப்படவுள்ளன.
இந்த முடிவு இந்திய ராணுவத்தின் தன்மையை நியாயமான மற்றும் சமமான அமைப்பாக வலுப்படுத்த உதவும். மேலும் இந்த புதிய முடிவால் கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.