கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி - யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிமுகம்

September 21, 2022

மும்பையில், செப்டம்பர் 20ஆம் தேதி, குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ், “யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தற்போது, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து, யூனியன் பேங்க் ஆஃப் […]

மும்பையில், செப்டம்பர் 20ஆம் தேதி, குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ், “யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தற்போது, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இது குறித்து, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “ரூபே கிரெடிட் கார்டுகள் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, ஆர்பிஐ எங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்துள்ளது. எங்கள் வங்கியின் தலைவர் மணிமேகலை மற்றும் நிர்வாக இயக்குனர் நித்திஷ் ரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்” என்று பதிவிட்டுள்ளது.

இது தொடர்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “BHIM செயலியின் மூலம், ரூபே கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மேலும், கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யவும் ரூபே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் பீம் செயலியில் மட்டும் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற யுபிஐ தளங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இது தொடர்பாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ரூபே கிரெடிட் கார்டுகள், யுபிஐ ஐடி உடன் இணைக்கப்படும். அதன் மூலம், நேரடியாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி யுபிஐ பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை இதனை செயல்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய PwC இந்தியாவின் பெமென்ட் ட்ரான்ஸ்பர்மேஷன் பிரிவு தலைவர் மிஹிர் காந்தி, “கிரெடிட் கார்டுகள் மூலமான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு, குறைந்தபட்ச மதிப்பு பூஜ்யம் என்றும், அதிகபட்ச மதிப்பு குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கான உச்சவரம்பு பரிவர்த்தனைத் தொகை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரிக்கும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu