நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சிக் கணிப்பு 8 - 8.5% ஆக கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது 7% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு 6 - 6.8% ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. நாட்டின் ஜிடிபி 10.5 சதவீதமாக உயர்ந்து 301.75 ட்ரில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. பட்ஜெட் பற்றாக்குறை 5.9% ஆக கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இது 6.4% ஆகும்.
4. கல்வித்துறைக்கான பட்ஜெட் 1.13 ட்ரில்லியன் ரூபாயாக நிர்ணயம்
5. சுகாதாரத்துறை பட்ஜெட் 889.5 பில்லியன் ரூபாயாக உயர்வு
6. ரயில்வே துறைக்கு 2.4 ட்ரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
7. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 600 பில்லியன் ரூபாயாக அறிவிப்பு
8. தேசிய பாதுகாப்பு துறைக்கான நிதி 5.94 ட்ரில்லியன் ரூபாயாக அறிவிப்பு
9. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 66% நிதி உயர்த்தப்பட்டு 79000 கோடியாக அறிவிப்பு
10. 2023-24 ஆம் நிதியாண்டில், 15.43 ட்ரில்லியன் டாலர் நிதி கடன் பெற திட்டம்