வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு

January 9, 2023

வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பிரதேசம் இந்தூரில் புலம்பெயர்ந்தோருக்கான பிரவாசி பாரதிய திவஸ் 17-வது மாநாடு நடைபெறுகிறது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் வணிகம் தொடங்குவதற்கு வழிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வரலாற்று ரீதியிலான நெருக்கமான உறவை இந்தியாவும், மலேசியாவும் நெடுங்காலமாக பேணிக் காத்து வருகின்றன. இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 2,000 கோடி […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் புலம்பெயர்ந்தோருக்கான பிரவாசி பாரதிய திவஸ் 17-வது மாநாடு நடைபெறுகிறது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் வணிகம் தொடங்குவதற்கு வழிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. வரலாற்று ரீதியிலான நெருக்கமான உறவை இந்தியாவும், மலேசியாவும் நெடுங்காலமாக பேணிக் காத்து வருகின்றன. இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 2,000 கோடி டாலரை தாண்டியுள்ள நிலையில், அது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலக அளவில் பொருளதார நிலை மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலையிலும் கூட நாங்கள் 7 சதவீத வளர்ச்சியை தக்க வைப்போம் என உறுதியாக நம்புகிறோம். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu