மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.