அமெரிக்கா பயணத்தில் தமிழ்நாட்டின் முதலீட்டுப் புரிந்துணர்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்முனைவோரை ஈர்க்கும் முயற்சியில் அமெரிக்கா அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி 16 நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில், ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்ய RGBSI நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன, இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும்.