காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை துவங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் புறநகர் பகுதியான நார்வல் என்ற இடத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரை, இரண்டு நாள் ஓய்வுக்குப் பின், ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் ஹீரா நகரில் இருந்து நேற்று காலை மீண்டும் துவங்கியது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால், யாத்திரையில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக ஜம்மு - காஷ்மீர் போலீசார், துணை ராணுவப் படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாத்திரை செல்லும் வழி முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.