யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளை கற்பிக்க யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இருப்பினும், யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி பல கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் இன்றி பட்டப்படிப்புகளை வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. யு.ஜி.சி.யின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கப்படும் எந்த உயர்கல்வியும் சட்டபூர்வமாக செல்லாது என்பதோடு, அந்த படிப்புகள் வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியானதாக பார்க்கப்படாது என்று யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.
எனவே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், www.ugc.gov.in இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் போலி கல்வி நிறுவனங்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். மேலும், யு.ஜி.சி. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கலாம். அத்தகைய நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.