உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை காணாத வகையில், உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்ய நகரங்களில், வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல் பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 6 ரஷ்ய பிராந்தியங்களில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் மாஸ்கோ தவிர, ஓரியோல், பிரியான்ஸ்க், ரைஸான், கலுகா ஆகிய இடங்களிலும் தீவிர ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல கிராமங்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள் சென்று விட்ட நிலையில், உக்ரைன் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து உக்ரைன் ராணுவ உதவிகளை பெற்று வருகிறது.