பர்கினோ பசோவில் பயங்கரவாத தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோ, கடந்த செப்டம்பரில் ராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. நைஜீரியா மற்றும் மாலியை எல்லைகளாகக் கொண்ட இந்த நாட்டில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பர்சலொகொ மாகாணத்தின் கயன் நகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தி 200 பேரை கொன்றனர். 140 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா பொறுப்பேற்றுள்ளது.