கடந்த 2 மாத காலத்தில், ஒரு பில்லியன் மதிப்பிலான யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. எனவே, இதுவரை இந்தியாவில் பதிவாகியுள்ள மொத்த யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 11 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மேலும், குறுகிய காலத்தில் ஒரு பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.இந்தியாவில், கடந்த இரு மாதங்கள் பண்டிகை காலமாக இருந்தன. எனவே, மக்கள் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் பண்டிகை காலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளில் முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. தனிநபர், வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு செலுத்தும் பரிவர்த்தனை மற்றும் தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை ஆகியவற்றில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கை கூறுகிறது.