இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யுபிஐ பணப்பரிவர்த்தனை வரம்புகளை கணிசமாக உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு முறை பரிவர்த்தனை செய்யக்கூடிய UPI Lite வரம்பு ரூ.500-லிருந்து ரூ.1000 ஆகவும், UPI Lite வாலட்டில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.2000-லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அம்சம் குறைந்த மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட UPI 123PAY சேவையில் ஒரு முறை பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகை ரூ.5000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் மூலம், யுபிஐ சேவையை நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்னும் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த உயர்வான வரம்பை பயன்படுத்திக் கொண்டு அதிக தொகையை எளிதாக பரிவர்த்தனை செய்ய முடியும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூறுகையில், யுபிஐ சேவை இந்தியாவின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த புதிய மாற்றங்கள் யுபிஐ சேவையை மேலும் பரவலாக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த புதிய மாற்றங்களை செயல்படுத்த தேவையான அறிவுறுத்தல்கள் தேசிய பண பரிவர்த்தனை கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) க்கு வழங்கப்படும்.