மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. முக்கியமாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் யுபிஐ மூலமாக செலுத்தும் தொகைக்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தற்போதைய நிலையில், ஒரு லட்ச ரூபாய் வரையிலான தொகையை யுபிஐ மூலம் செலுத்த முடியும். தற்போது, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 லட்ச ரூபாய் வரை யுபிஐ மூலம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.