‘நான் முதல்வன்’ பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 மாணவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சேவைத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய ரேங்கில் 23வது இடமும் மாநிலத்தில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் 'நான் முதல்வன்' திட்டத்தின் பயிற்சி மாணவர் ஆவார். இந்தத் திட்டத்தின் பயிற்சி பெரும் மோனிகா 39வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 மாணவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் முழுநேர உறைவிடப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள். மேலும், தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.