பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மை தேர்வு தேதி மாற்றபட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முதன்மை தேர்வுகள் ஜூன் 16ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.