உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாலைப் போக்குவரத்து கழக அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வலைதளத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு 10 நாட்கள் ஆகும் என உத்தரப் பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது. இணையம் அல்லாத, வழக்கமான/ பாரம்பரிய முறையில், போக்குவரத்து கழகத்தின் டிக்கெட்டை புக்கிங் செய்ய முடியும் என்பதால், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSRTC -ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை M/s Orion Pro என்ற நிறுவனம் வடிவமைத்திருந்தது. தற்போது, இந்த நிறுவனம் சார்பில் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு, தரவுகளை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புதிய சர்வர் ஏற்பாடு செய்து, இணைய வழியில் டிக்கெட் புக்கிங் சேவையை மேற்கொள்ள ஒரு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மும்பையில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.