விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ளன. இதனை பின்பற்றுவதாக உறுதி அளித்து, உருகுவே நாடு ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திட்டுள்ளது.
நாசா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், உருகுவே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமர் பகனானி ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திட்டார். நாசா நிர்வாகி பில் நெல்சன் மற்றும் சில அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அமெரிக்கா மற்றும் உருகுவே இடையிலான இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு தொடங்கியுள்ளதாக பகனானி தெரிவித்தார். உருகுவே நாட்டில் புதிய விண்வெளி ஆய்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். ஆர்டெமிஸ் அக்கார்ட்ஸ் - ல் கையெழுத்திடும் 36 வது நாடாக உருகுவே இணைந்துள்ளது. முன்னதாக, பிப்ரவரி 9 அன்று, கிரீஸ் நாடு கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.