உருகுவேயில் யமண்டூ ஓர்சி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உருகுவேயின் அதிபர் லூயிஸ் லக்கால் போவின் (வயது 51) பதவிக்காலம் விரைவில் முடிவடைகின்ற நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அல்வாரோ டெல்கடோ போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் யமண்டூ ஓர்சி (57) அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. தேர்தலில், யமண்டூ ஓர்சி 49.8% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அல்வாரோ டெல்கடோ 45.9% வாக்குகளை பெற்றார். ஆனால் அவர் வெற்றிபெறவில்லை. இதன் மூலம், யமண்டூ ஓர்சி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.