அணுக்கரு இணைப்பு தொழில்நுட்பத்தில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் எரிசக்தி துறை தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம், தேசப் பாதுகாப்பு மற்றும் மாசில்லா எரிசக்தி உருவாக்கம் ஆகியவை மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது.
“கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட அணுக்கரு இணைப்பு சோதனை, மனித வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அணுக்கரு இணைப்பு மூலம் அதிக அளவிலான எரிசக்தி உருவாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம், கார்பன் வெளியேற்றம் இல்லாத எரிசக்தி உருவாக்கம் சாத்தியப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி அடிப்படையிலான பாரம்பரிய முறை எரிசக்தி உருவாக்கம் மாற்றி அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சுமார் 624 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அணுக்கரு இணைப்பு தொடர்பான ஆராய்ச்சிக்கு செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.