அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் படி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல நாடுகளின் பொருட்களுக்கு 10% முதல் 41% வரை புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தைவானுக்கு 20%, தென்னாப்பிரிக்காவுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. சிரியாவுக்கு இதுவரை இல்லாத 41% வரி விதிக்கப்படும் எனவும், லாவோஸ், மியான்மர் 40%, சுவிட்சர்லாந்து 39%, செர்பியா, ஈராக் 35%, அல்ஜீரியா, லிபியா 30% எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வரும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.