ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதப்படையினர் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஈராக்கில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஆயுத குழுவினர் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படையினருக்கு அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியதாவது வடக்கு ஈராக் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுவினர் திங்கள் அன்று ட்ரோன் தாக்குதல் நடத்தினர். அதில் மூன்று அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கில் செயல்படும் அனைத்து ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களுக்கும் எதிராக தாக்குதல் நடவடிக்கை எடுக்க அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவு படையினர் அவ்வப்போது சிறிய வகை ஏவுகணைகளை வீசி மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் அதிகரித்து வருகிறது.