காசா போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது

February 21, 2024

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரவுள்ளது. காசா விவகாரத்தில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை எதிர்த்து வந்தது. இந்நிலையில் திடீரென தன் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர உள்ளது. முன்னதாக காசா தொடர்பாக கொண்டுவரும் தீர்மானங்களில் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் […]

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரவுள்ளது.

காசா விவகாரத்தில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை எதிர்த்து வந்தது. இந்நிலையில் திடீரென தன் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர உள்ளது. முன்னதாக காசா தொடர்பாக கொண்டுவரும் தீர்மானங்களில் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காசாவில் இஸ்ரேல் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாக சமீபகாலமாக குற்றம்சாட்டி வருகிறார். அதோடு அங்கு உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்த நிலையில் தற்காலிக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மான வரைவில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள காசாவின் ராபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காசாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 29,195 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள அங்கு உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அல்ஜீரியா நேற்று கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu